🔗

abi-yala-1084: 1084

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الصُّوَرِ قَدِ الْتَقَمَ وَحَنَا جَبْهَتَهُ يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ أَنْ يَنْفُخَ؟»، قِيلَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ يَوْمَئِذٍ؟ قَالَ: ” قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، عَلَى اللَّهِ تَوَكَّلْنَا “


1084. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும்?. எக்காளம் ஊதுகின்ற (வான)வர் எக்காளத்தின் முனைப் பகுதியை தமது வாயில் வைத்துக்கொண்டு, ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று நெற்றியை உயர்த்திக் காத்திருக்கிறாரே! என்று கூறினார்கள்.

அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! அந்நாளில் நாங்கள் என்னக் கூறவேண்டும்’ என்றுக் கேட்டோம். அதற்கவர்கள், “ஹஸ்புனல்லாஹு, வ நிஃமல் வகீல்; அலல்லாஹி தவக்கல்னா. (பொருள்: அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்; அவனே சிறந்த பாதுகாவலன்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்துள்ளோம்) எனக் கூறுங்கள்” என்று பதிலளித்தார்கள்.