🔗

abi-yala-4911: 4911

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ. قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَحَبُّ الشُّهُورِ إِلَيْكَ أَنْ تَصُومَهُ شَعْبَانُ. قَالَ: «إِنَّ اللَّهَ يَكْتُبُ عَلَى كُلِّ نَفْسٍ مَيِّتَةٍ تِلْكَ السَّنَةَ، فَأُحِبُّ أَنْ يَأْتِيَنِي أَجَلِي وَأَنَا صَائِمٌ».


4911. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நோன்பு நோற்பதற்கு மிகவும் விருப்பமான மாதமாக ஷஅபான் மாதம் உள்ளதே (அதன் காரணம் என்ன)?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ், அந்த ஆண்டில் மரணிக்கவிருக்கும் ஒவ்வொரு உயிரையும் (பட்டியலில்) பதிவு செய்கிறான். எனவே, எனது தவணை (மரண நேரம்) வரும்போது நான் நோன்பாளியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.