«يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، فَيَهُونُ ذَلِكَ الْيَوْمُ عَلَى الْمُؤْمِنِ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»
6025. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அரைப் பொழுது, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள். ஆனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த நாள், சூரியன் மறைவதற்காகக் கீழ்நோக்கிச் சென்று மறையும் நேரம் போல் எளிதாகிவிடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)