🔗

அபூதாவூத்: 1048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«يَوْمُ الْجُمُعَةِ ثِنْتَا عَشْرَةَ – يُرِيدُ – سَاعَةً، لَا يُوجَدُ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا، إِلَّا أَتَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ»


பாடம்: 208

வெள்ளிக்கிழமையன்று பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் எது?

1048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று பன்னிரண்டு நாழிகைகள் உள்ளன. (அவற்றில் ஒரு நாழிகையில்) எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறாரோ அதை அவருக்கு மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அஸருக்குப்பின் கடைசி நேரத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)