رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ «غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ قَالَ: تَوَضَّأَ ثَلَاثًا فَقَطْ
110. நான் உஸ்மான் (ரலி) அவர்களை தன் இரு முழங்கைகளையும் மும்முறை கழுவக் கண்டேன். மேலும் தலையை மூன்று முறை மஸஹ் செய்யவும் கண்டேன் என்று கூறி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இதே போன்று உலூச் செய்யக் கண்டேன் என்ற உஸ்மான் (ரலி) கூறியதாக ஷகீத் பின் ஸலமா அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை இஸ்ராயீல் மூலம் வகீஃ அவர்கள் அறிவிக்கும்போது உஸ்மான் (ரலி) அவர்கள் எல்லா உறுப்புகளையும் மும்முறை கழுவி உலூச் செய்ததாக மட்டும் அறிவிக்கிறார்.