🔗

அபூதாவூத்: 1157

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَكْبًا جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْهَدُونَ أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ، فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا، وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ»


1157. அபூ உமைர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினர்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களது நோன்பை விடுமாறும், அவர்கள் (மறுநாள்) காலை ஆனதும் அவர்களது தொழும் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என எனது தந்தையின் உடன்பிறந்த (சில அன்ஸாரீ) நபித்தோழர்கள் எனக்கு அறிவித்தனர்.