أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَوَاكِي، فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ»، قَالَ: فَأَطْبَقَتْ عَلَيْهِمُ السَّمَاءُ
1169. (பருவ மழை பொய்த்து விட்டதால்) சிலர் அழுதுக் கொண்டே வந்து நபி (ஸல்) அவர்களிடத்தில் முறையிட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின் என்று பிரார்த்தனை செய்தார்கள்.
(பொருள்: இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
உடனே மேகம் திரண்டு மழை பெய்தது.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)