🔗

அபூதாவூத்: 122

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَلَمَّا بَلَغَ مَسْحَ رَأْسِهِ، وَضَعَ كَفَّيْهِ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ، فَأَمَرَّهُمَا حَتَّى بَلَغَ الْقَفَا، ثُمَّ رَدَّهُمَا إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ»، قَالَ مَحْمُودٌ: قَالَ: أَخْبَرَنِي حَرِيزٌ


122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன். அவர்கள் தலைக்கு மஸஹ் செய்யும் கட்டத்தை அடைந்த போது தன் இரு முன்னங் கைகளையும் தமது முன்னந் தலையில் வைத்து அவற்றை பிடரி வரை கொண்டு சென்று பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே தம் கைகளைக் கொண்டு வந்தார்கள் என மிக்தாம் பின் மஃகீ கரிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

மஹ்மூது மனகாலித் அவர்கள் தமக்கு முந்தைய அறிவிப்பாளராக வலீத் பின் முஸ்லிமைக் கூறாமல் அதற்கடுத்த அறிவிப்பாளர் ஹதீஸ் தமக்கு அறிவித்தாகக் குறிப்பிடுகிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மது, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)