كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْتِينَا فَحَدَّثَتْنَا أَنَّهُ قَالَ: «اسْكُبِي لِي وَضُوءًا»، فَذَكَرَتْ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ فِيهِ: فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، وَوَضَّأَ وَجْهَهُ ثَلَاثًا، وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مَرَّةً، وَوَضَّأَ يَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ بِمُؤَخَّرِ رَأْسِهِ، ثُمَّ بِمُقَدَّمِهِ وَبِأُذُنَيْهِ كِلْتَيْهِمَا ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا، وَوَضَّأَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا
126. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களிடம் (அடிக்கடி) வருபவர்களாக இருந்தார்கள். (ஒருநாள்) எங்களிடம் (வந்து) “எனக்கு ‘உளூ’ செய்ய தண்ணீர் ஊற்று” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்ததை வர்ணித்தார்கள்.
(பின்னர்) உள்ளங்கைகளை மூன்று முறை கழுவினார்கள். மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். ஒரு முறை வாய்க் கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி மூக்கை சிந்தி சுத்தம் செய்தார்கள். இரு கைகளையும் மும்மூன்று தடவை கழுவினார்கள்.
தலையை இரண்டு முறை தடவி மஸஹ் செய்தார்கள். (முதலில்) பின்னாலிருந்து முன்னோக்கியும் பின்பு முன்னாலிருந்து பின்னோக்கியும் தடவினார்கள். இரு காதுகளின் உட்பகுதியையும் வெளிப்பகுதியையும் தடவினார்கள். இரு கால்களையும் மும்மூன்று தடவை கழுவினார்கள்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
முஸத்தத் (ரஹ்) அவர்களின் கருத்தைதான் அறிவித்து இருக்கிறேன். (அவரின் வார்த்தைகளை முழுமையாக மனனம் செய்யவில்லை).