«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا، حَرُمَ عَلَى النَّارِ»
பாடம்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்கள் தொழுதல்.
1269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை வழமையாக தொழுதுவருவாரோ அவர் நரகத்திற்கு தடைசெய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(நுஃமான் பின் முன்திர் அவர்களைப் போன்றே) அலாஉ பின் ஹாரிஸ், ஸுலைமான் பின் மூஸா ஆகியோரும் மக்ஹூல் வழியாக இதே அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.