🔗

அபூதாவூத்: 14

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»


பாடம்: 6

மலம், ஜலம் கழிக்கும் போது எப்போது ஆடையை விலக்குவது?

14. நபி (ஸல்) அவர்கள் தன் இயற்கைக் கடனை நிறைவேற்ற விரும்பினால் (தம் மறைவான உறுப்புகளை யாரும் பார்த்துவிடாதபடி) தரைக்கு மிக நெருக்கமான பின் தமது ஆடையை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள், அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (அஃமஷ் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால்) இது பலவீனமானதாகும்.

(அபூதாவூத் இமாம் அவர்களின் எழுத்தாளரான) அபூஈஸா அர்ரம்லீ (இஸ்ஹாக் பின் மூஸா பின் ஸஃத்) கூறுகிறார்:

அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எங்களுக்கு, அஹ்மத் பின் வலீத் அவர்கள், அம்ர் பின் அவ்ன் —> அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் —> அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்று அறிவித்தார்.