🔗

அபூதாவூத்: 1407

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ»،


பாடம்:

இதஸ்மாஉன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க போன்ற அத்தியாயங்களில் இடம்பெரும் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.

1407. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூதாவூத் கூறுகிறார்:

அபூஹுரைரா (ரலி) இஸ்லாத்தை ஏற்றது, கைபர் போர் நடைப்பெற்ற ஹிஜ்ரீ ஆறு (அல்லது சிலரின் கருத்துப்படி ஏழாம்) வருடத்திலாகும். எனவே இந்த வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தது அவர்களின் கடைசிகட்ட நடைமுறையாக இருந்துள்ளது.