🔗

அபூதாவூத்: 1427

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي آخِرِ وِتْرِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سُخْطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»


1427.

“அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”

இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹிஷாம் பின் அம்ர் அவர்கள், ஹம்மாதுக்கு மூத்த ஆசிரியர் ஆவார்.

யஹ்யா பின் மஈன் (ரஹ்) அவர்கள், “ஹம்மாத் பின் ஸலமா தவிர வேறு யாரும் அவரிடமிருந்து அறிவிக்கவில்லை” என்று கூறியதாக எனக்கு எட்டியுள்ளது.

மேலும் அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஈஸா இப்னு யூனுஸ் அவர்கள், ஸயீத் இப்னு அபீ அரூபா —> கதாதா —> ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா —> தமது தந்தை (ரலி) —> உபை இப்னு கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் ருகூஃவுக்கு முன் குனூத் ஓதினார்கள்” என்று அறிவித்துள்ளார்.

ஈஸா இப்னு யூனுஸ் அவர்கள், ஃபித்ர் இப்னு கலீஃபா —> ஸுபைது —> ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா —> தமது தந்தை (ரலி) —> உபை இப்னு கஅப் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் இதே போன்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கருத்து ஹஃப்ஸ் இப்னு கியாஸ் —> மிஸ்அர் —> ஸுபைது —> ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா —> தமது தந்தை (ரலி) —> உபை இப்னு கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.