«رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى، وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ، وَأَيْقَظَتْ زَوْجَهَا، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ»
பாடம்:
இரவுத் தொழுகையை தொழ தூண்டல்.
1450. ஒருவர் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் மனைவியையும் எழுப்ப அவள் எழுந்து தொழுகிறாள். அவள் எழ மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். இம்மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
ஒரு பெண் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் கணவனையும் எழுப்பி அவன் எழ மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பும் இப்பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)