«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَأَصَابَهُمُ الْبَرْدُ فَلَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ أَنْ يَمْسَحُوا عَلَى الْعَصَائِبِ وَالتَّسَاخِينِ»
பாடம் : 57
தலைப் பாகையில் மஸஹ் செய்தல்.
146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சிறு படையை அனுப்பினார்கள். (அவர்கள் சென்ற இடத்தில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த(தும் முறையிட்டனர். அப்)போது அவர்களது தலைப்பாகைகளிலும், காலுறைகளிலும் மஸஹ் செய்து கொள்ள அனுமதித்தார்கள் என சவ்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் சவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராஷித் பின் ஸஃது அவர்கள் சவ்பான் (ரலி) அவர்களுக்கு முன்னரே மரணித்து விட்டார். எனவே, அவர்களிடம் கேட்டிருக்க முடியாது என இமாம் நஸயீ, திர்மிதீ, அஹ்மத், ஹாகிம், தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது. எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஸ் அல்ல என ஆகிவிடுகிறது.)