«لَا يَخْرُجُ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ»
பாடம்: 7
கழிவறையில் பேசுவது அருவருக்கத்தக்கது.
15. இரண்டு மனிதர்கள் மலம் கழிக்க (ஒன்றாகச்) சென்று, ஒருவர் மற்றவருக்கு முன் மறைவான உறுப்புகளைத் திறந்தும், பேசிக் கொண்டும் மலம் கழிக்க வேண்டாம். இதனால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கோபப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து பலர் இந்த நபிமொழியை அறிவிக்கிறார்கள். இவர்களில்) இக்ரிமா பின் அம்மார் மட்டும் தான் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (மற்றவர்கள் மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்)