🔗

அபூதாவூத்: 1500

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى – أَوْ حَصًى – تُسَبِّحُ بِهِ، فَقَالَ: «أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا – أَوْ أَفْضَلُ -»، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلُ ذَلِكَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلُ ذَلِكَ»


பாடம்:

கற்களைக் கொண்டு தஸ்பீஹ் செய்தல்.

1500. நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் பேரீச்சம் கொட்டைகளோ, அல்லது சிறு கற்களோ இருந்தன. அவற்றைக் கொண்டு அவர் தஸ்பீஹ் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, அவை

ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிஸ்ஸமாஇ,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிர்அர்ளி,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா பைன தாலிக,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா ஹுவ காலிகுன்”

இதேபோன்று (ஸுப்ஹானல்லாஹி என்ற இடத்தில்)
அல்லாஹு அக்பர் என்பதையும்;
அல்ஹம்து லில்லாஹ் என்பதையும்;
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதையும்;
லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ் என்பதையும் (சேர்த்துக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி)