«مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»
1518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தொடர்ந்து பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற அல்லாஹ் வழியை ஏற்படுத்துவான். மேலும் எல்லா வகையான கவலைகளிலிருந்தும் விடுதலையளிப்பான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)