🔗

அபூதாவூத்: 153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ شَهِدَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَسْأَلُ بِلَالًا، عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كَانَ يَخْرُجُ يَقْضِي حَاجَتَهُ، فَآتِيهِ بِالْمَاءِ فَيَتَوَضَّأُ، وَيَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَمُوقَيْهِ»


153. அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமி என்பார் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) யிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உலூவின் முறையைக் கேட்டார். அதற்கு பிலால் (ரலி), அவர்கள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தேவையை நிறைவேற்றுவார்கள். அவர்கள் உலூச் செய்வார்கள். தனது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்து கொள்வார்கள் என்று பதிலளித்தனர் என்று அபூ அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

அபூ அப்துர்ரஹ்மான் அஸ்ஸலமீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் தைம் பின் முர்ரா கிளையாரின் அடிமையான அபூஅப்துல்லாஹ் என்பவராவார்.