«أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ، فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا»، قَالَ مُسَدَّدٌ: عَنْ دَلْهَمِ بْنِ صَالِحٍ
155. நஜ்ஜாஷி (மன்னர்) அவர்கள் இரண்டு சாதாரண கருப்பு நிற காலுறைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார். அவ்விரண்டையும் அவர்கள் அணிந்து கொண்டார்கள். பின்னர், உலூச் செய்து கால்களை கழுவுவதற்கு பதில் அவ்விரண்டின் மீதும் மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி).