«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»
1554. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வமின் ஸய்யிஇல் அஸ்காம்” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
(துஆவின் பொருள்: அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)