«مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ»
பாடம்: 8
சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர் ஸலாமுக்கு பதில் கூறலாமா?
16. (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) கூறவில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் தயம்மும் செய்த பின்னர் அம்மனிதருக்கு பதில் ஸலாம் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும், மற்றவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.