«مَا كُنْتُ أَرَى بَاطِنَ الْقَدَمَيْنِ إِلَّا أَحَقَّ بِالْغَسْلِ، حَتَّى» رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَهْرِ خُفَّيْهِ
163. ஹதீஸ் எண்-162 இல் வரும் செய்தி அஃமஷ்—அபூஇஸ்ஹாக்—அப்து கைர்—அலி (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
இதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது இரு காலுறைகளுக்கு மேல் மஸஹ் செய்ய நான் காணும் வரை பாதங்களின் அடிப்பாகம் தான் கழுவுவதற்கு பெரிய பகுதி என்று நான் கருதியிருந்தேன் என்று அலி (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.