🔗

அபூதாவூத்: 1645

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«مَنْ أَصَابَتْهُ فَاقَةٌ، فَأَنْزَلَهَا بِالنَّاسِ، لَمْ تُسَدَّ فَاقَتُهُ، وَمَنْ أَنْزَلَهَا بِاللَّهِ، أَوْشَكَ اللَّهُ لَهُ، بِالْغِنَى، إِمَّا بِمَوْتٍ عَاجِلٍ، أَوْ غِنًى عَاجِلٍ»


1645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கேனும் வறுமை ஏற்பட்டு, அதை அவர் மக்களிடம் முறையிட்டால் (மக்களின் உதவியை எதிர்பார்த்தால்), அவருடைய வறுமை நீக்கப்படாது. மாறாக, அவர் அதனை அல்லாஹ்விடம் முறையிட்டால், அல்லாஹ் அவருக்கு விரைவான மரணத்தின் மூலமோ அல்லது விரைவான செல்வத்தின் மூலமோ போதுமான வசதியை அளிப்பான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)