🔗

அபூதாவூத்: 165

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«وَضَّأْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، مَسَحَ أَعْلَى الْخُفَّيْنِ وَأَسْفَلَهُمَا»


165. தபூக் யுத்தத்தின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கட்கு உலூச் செய்ய நீர் ஊற்றினேன். அவர்கள் காலுறைகளின் (மேல் பாகத்திலும்) அடிப்பாகத்திலும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி) வாயிலாக அவரின் எழுத்தாளர்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் சவ்ர் என்பார் தனக்கு முன்னுள்ள அறிவிப்பாளர் ரஜமி என்பாரிடமிருந்து இந்த ஹதீஸை செவியுறவில்லை என எனக்கு தகவல் கிடைத்தது.