وَكَانَتْ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ لَهُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ، الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي، فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلَّا ظِلْفًا مُحْرَقًا، فَادْفَعِيهِ إِلَيْهِ فِي يَدِهِ»
1667. அப்துர்ரஹ்மான் பின் புஜைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவரான எனது பாட்டி உம்மு புஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நான், அல்லாஹ்வின் தூதரே! ஸல்லல்லாஹு அலைக (அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!) சில நேரம் எனது வாசலில் ஒரு ஏழை நிற்கும்போது அவருக்கு கொடுப்பதற்கேற்ற எதுவும் என்னிடம் இருப்பதில்லையே என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்போது உம்மிடம் எதுவும் இல்லாவிட்டால் (குறைந்த பட்சம்) கால்நடைப் பிராணிகளின் கரிந்த கால்குளம்பே இருந்தாலும் அதை அவரின் கையில் கொடுத்துவிடு! என்று கூறினார்கள்.