أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «الْمَاءُ»، قَالَ: فَحَفَرَ بِئْرًا، وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ
1681. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தாய்-உம்மு ஸஅது இறந்து விட்டார். (அவர் சார்பில் நான் செய்யும்) எந்த தர்மம் சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் ஒரு கிணற்றை வெட்டி இது உம்மு ஸஅதின் (நன்மைக்கான) கிணறு என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஒரு மனிதர்