🔗

அபூதாவூத்: 17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ ” إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ أَوْ قَالَ: عَلَى طَهَارَةٍ


17. முஹாஜிர் பின் குன்ஃபுத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது வந்து அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து முடிக்கும் வரை அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை.

பிறகு, “தூய்மையில்லாத நிலையில் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதை நான் வெறுக்கிறேன்” என்று அவரிடம் காரணம் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹுளைன் பின் முன்திர் (ரஹ்)