قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ؟ فَقَالَ: «هَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْهُ»، أَوْ قَالَ: «بَضْعَةٌ مِنْهُ»
பாடம்: 71
ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி.
182. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! ஒருவர் உளூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுவும் அவரது (உடலிலுள்ள) ஒரு உறுப்புதானே?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஹிஷாம் பின் ஹஸ்ஸான், ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷுஅபா, இப்னு உயைனா, ஜரீர் அர்ராஸீ ஆகியோர், முஹம்மது பின் ஜாபிர் —> கைஸ் பின் தல்க் —> தல்க் பின் அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.