🔗

அபூதாவூத்: 202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْجُدُ وَيَنَامُ وَيَنْفُخُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي وَلَا يَتَوَضَّأُ، قَالَ: فَقُلْتُ لَهُ: صَلَّيْتَ وَلَمْ تَتَوَضَّأْ وَقَدْ نِمْتَ، فَقَالَ: «إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا»، زَادَ عُثْمَانُ، وَهَنَّادٌ: فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ،


202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்வார்கள். பிறகு உலூச் செய்யாமலேயே குறட்டை விட்டவாறு (ஸஜ்தாவில்) உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுவார்கள். அவர்களிடம் நான் உறங்கிய நீங்கள் உலூச் செய்யாமல் தொழுதீர்களே? என்று வினவினேன். படுத்து உறங்கியவர்கள் தான் உலூச் செய்ய வேண்டும் என்று அவர்கள் பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

உஸ்மான், ஹன்னாத் ஆகிய அறிவிப்பாளர்கள் ஏனெனில் (ஒருவர்) படுத்து உறங்கும் போது மூட்டிணைப்புகள் தளர்வுறுகின்றன. (அதனால் காற்று வெளியேற வாய்ப்புண்டு) என்று கூடுதலாக அறிவிக்கின்றனர்.


இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றனர் :

படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய úண்டும் என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இதை அறிவிக்கவில்லை.

இதன் ஆரம்பத்தை இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களிடமிருந்து பெருங்குழுவினரே அறிவிக்கின்றனர். அவர்கள் யசீத் கூறியதி லிருந்து எதையுமே குறிப்பிடவில்லை.

நபி (ஸல்) அவர்கள் (உள்ளமும் சேர்ந்து உறங்குவதை விட்டும்) பாதுகாக்கப்பட்டவர்களாவார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எனது கண்கள் உறங்கும் எனது உள்ளம் உறங்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஷுஃபா அவர்கள் குறிப்பிடு கின்றார்கள்.

கதாதா அவர்கள் அவுல் ஆலியாவிடமிருந்து செவியுற்றவை நான்கு ஹதீஸ்களை மட்டும் தான். அவை : யூனூஸ் பின் மத்தா அவர்கள் தொடர்பான ஹதீஸ். தொழுகை தொடர்பான இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் நீதிபதிகள் மூவர் என்ற ஹதீஸ், எனக்கு விருப்பமானவர்கள் என்னருகில் உள்ளனர். அவர்களில் உமர் (ரலி) ஆவார் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆகியவையாகும்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :

யசீத் அபூகாலித் தாலானியில் ஹதீஸை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். இதை அவர்கள் மறுக்கும் விதமாக என்னை கடிந்து கொண்டார்கள். அதோடு, கதாதா அவர்களின் அறிவிப்பாளர்கள் கூறாததை அவர்கள் கூறியதாக அவர்களின் மீது புகுத்திச் சொல்ல யசீத் அபூகாலித் தாலானிக்கு என்ன அவசியம் எற்பட்டு விட்டது? என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் இதை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. (காரணம் இது பலவீனமாகும்).