🔗

அபூதாவூத்: 2083

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ»، ثَلَاثَ مَرَّاتٍ «فَإِنْ دَخَلَ بِهَا فَالْمَهْرُ لَهَا بِمَا أَصَابَ مِنْهَا، فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ»


பாடம்:

(மணப்பெண்ணின்) காப்பாளர்.

2083. “தனது காப்பாளரின் அனுமதியின்றி, எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்தால் அவளது திருமணம் செல்லாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இதை மூன்று தடவை கூறினார்கள்.

“அவளுடன் தாம்பத்தியம் கொண்டால், அவளுடைய கற்புரிமைக்காக மஹர் கொடுக்கப்பட வேண்டும். (காப்பாளர்களும், மணப்பெண்ணும்) சச்சரவு செய்தால், காப்பாளர் இல்லாதவருக்கு ஆட்சியாளரே (அல்லது நீதிபதியே) காப்பாளர் ஆவார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)