«إِنَّمَا جُعِلَ ذَلِكَ رُخْصَةً لِلنَّاسِ فِي أَوَّلِ الْإِسْلَامِ لِقِلَّةِ الثِّيَابِ، ثُمَّ أَمَرَ بِالْغُسْلِ، وَنَهَى عَنْ ذَلِكَ»
பாடம் : 84
விந்து வெளிப்படாது உடலுறவு கொள்ளல்.
214. உடலுறவு கொண்டு விந்து வெளிப்படவில்லை என்றால் குளிக்க வேண்டியதில்லை என்பதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அனுமதி வழங்கிய காரணம் ஆடைகள் போதாமையால் தான். பிறகு, அதற்கு தடை விதித்து குளிக்க வேண்டுமென்று கட்டளை விதித்து விட்டார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
நீருக்கு நீர் பரிகாரம் என்றால் உடலுறவின் போது இந்திரியம் வெளிப்பட்டால் மட்டும் குளிப்பது கடமையாகும் என்பதை குறிக்கும். இது ஆரம்ப காலத்தில் உள்ள சலுகை என்று இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.