«لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ» فَجَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ذَئِرْنَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ، فَرَخَّصَ فِي ضَرْبِهِنَّ، فَأَطَافَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ لَيْسَ أُولَئِكَ بِخِيَارِكُمْ»
2146. இயாஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் பெண் அடியார்களை (மனைவியரை) அடிக்காதீர்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்கு எதிராகத் துணிவு பெற்றுவிட்டார்கள் (கட்டுப்பட மறுக்கிறார்கள்)” என்று கூறினார். எனவே அவர்களை (லேசாக) அடிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் ஏராளமான பெண்கள் வந்து தங்கள் கணவன்மார்களைப் பற்றி முறையிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஹம்மதின் குடும்பத்தாரிடம் ஏராளமான பெண்கள் வந்து தங்கள் கணவன்மார்களைப் பற்றி முறையிட்டுள்ளனர். (பெண்களை அடிக்கும்) அவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.