«وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ وَهُوَ جُنُبٌ غَسَلَ يَدَيْهِ»
223. மேலே உள்ள அதே இஸ்நாதையும், பொருளையும் கொண்டு இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பு கடமையாகி இருக்கும்போது சாப்பிட விரும்பினால் கைகளை கழுவிக் கொள்வார்கள் என்பது கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :
இந்த ஹதீஸை யூனுஸ் அவர்களிடமிருந்து இப்னு வஹப் என்பார் அறிவிக்கும் போது சாப்பிடுவதை மட்டும் குறிப்பிடுகின்றார்.
சாலிஹ் என்பவர் கஷ்ரி வழியாக அறிவிக்கும் போது அபூசலமா என்பதற்கு பதிலாக அபூஸலமாவோ, உர்வாவோ என்று சந்தேகமாக குறிப்பிடுகின்றார்.