🔗

அபூதாவூத்: 225

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ النَّبِيَّ صلّى الله عليه وسلم رَخَّصَ لِلْجُنُبِ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ أَوْ نَامَ، أَنْ يَتَوَضَّأَ»


225. குளிப்புக் கடமையானவர் உண்ணவோ, பருகவே, உறங்கவோ வேண்டுமென்றால் அவர் (குளிக்காமல்) உளூச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இதன் அறிவிப்பாளர்களான அம்மார் பின் யாஸிர் அவர்களுக்கும் யஹ்யா பின் யஃமருக்கும் இடையில் ஒரு அறிவிப்பாளர் (விடுபட்டு)உள்ளார்.

குளிப்புக் கடமையானவர் சாப்பிட விரும்பினால் உளூச் செய்துக் கொள்வார் என்று அலீ பின் அபீதாலிப், இப்னுஉமர், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.