«إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا، فَلْيُفْطِرْ عَلَى التَّمْرِ، فَإِنْ لَمْ يَجِدِ التَّمْرَ، فَعَلَى الْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورٌ»
பாடம்:
எதை சாப்பிட்டு நோன்பு துறக்க வேண்டும்?
2355. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நோன்பாளியாக இருந்தால் பேரீச்சம்பழத்தால் நோன்பு துறங்கள்! பேரீச்சம்பழம் கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறங்கள்!. ஏனெனில் அது நன்கு தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.
அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)