252. உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் இரு பெண்மணிகள் வந்தார்கள் என்று இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றபோது, அப்பெண்மணிக்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன் என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று மேலுள்ள ஹதீஸின் பொருளையே தெரிவிக்கின்றார். ஒவ்வொரு இரு கையளவு நீரின் போதும் உனது பின்னலை அழுந்த தேய்ப்பாயாக என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இதில் அறிவிக்கின்றார்.