«أَنَّهُ كَانَ يَغْسِلُ رَأْسَهُ بِالْخِطْمِيِّ وَهُوَ جُنُبٌ يَجْتَزِئُ بِذَلِكَ، وَلَا يَصُبُّ عَلَيْهِ الْمَاءَ»
பாடம் : 101
மூலிகையைத் தேய்த்து கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்.
256. நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பின் போது தனது தலையை கித்மிய்யி என்ற மூலிகையினால் தேய்த்து கழுவுவார்கள். இதை கொண்டே போதுமாக்கிக் கொள்வார்கள். இதற்கு தண்ணீர் ஊற்றமாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).