فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»
பாடம் : 106
மாதவிலக்கானவளிடம் உடலுறவு கொள்ளல்.
264. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூதாவூத் கூறுகிறார்:
சரியான அறிவிப்புகளில் இவ்வாறே ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று வந்துள்ளது.
சில அறிவிப்புகளில் இச்செய்தியை ஷுஃபா அவர்கள், நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.