🔗

அபூதாவூத்: 266

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِذَا وَقَعَ الرَّجُلُ بِأَهْلِهِ وَهِيَ حَائِضٌ فَلْيَتَصَدَّقْ بِنِصْفِ دِينَارٍ»


266. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இதே போன்று தான் அலீ பின் பதீமா என்பார் நபி (ஸல்) அவர்கள் வழியாக முர்ஸலாக அறிவிக்கின்றார்.

அவர் ஒரு தீனாரில் ஐந்தில் இரண்டை தர்மம் செய்ய வேண்டும் என்று நான் அவருக்கு உத்திரவு இடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஸாஹீ என்பார் அறிவிக்கின்றார். இந்த ஹதீஸ் முஃலல் என்ற தரத்தில் அமைந்ததாகும். அதாவது, இதன் அறிவிப்பாளர்கள் வரிசையில் தொடர்ச்சியாக இருவர் அல்லது இருவருக்கு மேல் விடுப்பட்ட தொடராகும்.