إِنَّ أُمَّ حَبِيبَةَ سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّمِ، فَقَالَتْ عَائِشَةُ: فَرَأَيْتُ مِرْكَنَهَا مَلْآنَ دَمًا، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ، ثُمَّ اغْتَسِلِي»
279. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உம்மு ஹபீபாவின் (தொடர் உதிரப் போக்கு) இரத்தம், வாயகன்ற பாத்திரம் நிறைய இருப்பதை நான் பார்த்தேன்)
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அதிக இரத்தப் போக்கு பற்றிக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உம்மு ஹபீபாவை நோக்கி) “எத்தனை நாட்கள் மாதவிடாயில் இருப்பது (வழக்கமோ) அத்தனை நாட்கள் தொழுவதைத் தவிர்த்துக் கொள். அதன் பிறகு குளித்துக்கொள் (பிறகு தொழுதுகொள்)” என்று கூறினார்கள்.
….
சூதக இரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படிப்பட்டவர் (ஒரு தடவை மட்டும் குளிப்பாராக! பிறகு தனது மாதவிடாய் நாட்கள் வரை உலூச் செய்வாராக என்று கூறுகின்றார்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).