🔗

அபூதாவூத்: 2805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْأُذُنِ وَالْقَرْنِ»


2805. பாதி அல்லது பாதிக்குமேல் காது இல்லாத, கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(குறிப்பு: அழ்பா என்பதற்கு அகராதியில் கொம்பு உடைந்த ஆடு, காது பிளக்கப்பட்ட  ஆடு என்பதற்கும் கூறப்படும். உட்பகுதியில் கொம்பு உடைந்த ஆடு என்பதற்கும் கூறப்படும். சிலர் இந்த செய்தியை இரண்டாவது பொருளிலும் கூறுகின்றனர்)