🔗

அபூதாவூத்: 315

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهَا ذَكَرَتْ نِسَاءَ الْأَنْصَارِ، فَأَثْنَتْ عَلَيْهِنَّ وَقَالَتْ لَهُنَّ: مَعْرُوفًا، وَقَالَتْ: دَخَلَتِ امْرَأَةٌ مِنْهُنَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ مَعْنَاهُ إِلَّا أَنَّهُ قَالَ «فِرْصَةً مُمَسَّكَةً».


315. அன்னை ஆயிஷா (ரலி) அன்சாரிப் பெண்களை குறிப்பிடும் போது அவர்களை புகழ்ந்து மார்க்க விஷயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதற்காக அவர்களை பாராட்டினார்கள். மேலும், ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வருகையுற்று, என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தை இந்த அறிவிப்பாளர் அறிவிக்கும் போது, கஸ்தூரி வாசமூட்டப்பட்ட (பருத்தி அல்லது கும்பளி) துண்டு என்று அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் :அன்னை ஆயிஷா (ரலி).