319. இதே ஹதீஸை போன்று இப்னு வஹப் இடமிருந்து சுலைமான் பின் தாவூத் அல் மஹ்ரிய்யு என்பாரும் அப்துல் மலிக் பின் ஷுஐப் என்பாரும் அறிவிக்கின்றனர். இதன் அறிவிப்பாளர், முஸ்லிம்கள் (தொழு வதற்கு) கிளம்பி தங்களது முன்னங்கை களை மண்ணில் அடித்தனர். ஆனால் அவர்கள்(தங்கள் கைகளில்) மண்ணில் எதையும் (அள்ளி) வைத்திருக்கவில்லை என்று அறிவித்து மேலுள்ள ஹதீஸை போன்றே தெரிவிக்கின்றார். ஆனால் இவர் முழங்கைகள், அக்குள்களை குறிப்பிட வில்லை. இப்னுல் லைஸ் (அப்துல் மலிக் பின் ஷுஐப் முழங்கைகளுக்கு மேல் வரை தடவினார்கள் என்று) அறிவிக்கின்றார்.
இதை இமாம் இப்னு மாஜா தமது நூலில் பதிவாக்கியுள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸ் முன்கதிர் (என்ற வகையை சேர்ந்த பலவீனமான ஹதீஸ்) ஆகும். உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா என்பார் அம்மார் பின் யாசிர் (ரலி) யை சந்திக்கவில்லை. இவரது தந்தை வழியாக அம்மார் பின் யாசிர்(ரலி)யிட மிருந்து அறிவிக்கும் இவரது ஹதீஸை சுருக்கி முழுமையான தொடராக நஸயீ இப்னு மாஜா ஆகியோர் அறிவிக்கின்றார்கள் என்று முன்திரி குறிப்பிடுகின்றார்.