🔗

அபூதாவூத்: 3201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِسْلَامِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»


3201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அதில் பின்வரும் துஆவை ஓதினார்கள்.

“அல்லாஹும் மஃக்ஃபிர் லி ஹய்யினா, வ மய்யி(த்)தினா, வ ஸஃகீரினா, வ கபீரினா, வ தகரினா, வ உன்ஸானா, வ ஷாஹிதினா, வ ஃகாயிபினா. அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹூ மின்னா ஃப அஹ்யிஹீ அலல் ஈமான். வமன் தவஃப்பை(த்)தஹூ மின்னா ஃப தவஃப்பஹு அலல் இஸ்லாம். அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹூ, வலா துழில்லனா பஃதஹ்”.

(பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை ஈமானுடன் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை இஸ்லாமிய அடிப்படையில் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)