احْتَلَمْتُ فِي لَيْلَةٍ بَارِدَةٍ فِي غَزْوَةِ ذَاتِ السُّلَاسِلِ فَأَشْفَقْتُ إِنِ اغْتَسَلْتُ أَنْ أَهْلِكَ فَتَيَمَّمْتُ، ثُمَّ صَلَّيْتُ بِأَصْحَابِي الصُّبْحَ فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا عَمْرُو صَلَّيْتَ بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ؟» فَأَخْبَرْتُهُ بِالَّذِي مَنَعَنِي مِنَ الِاغْتِسَالِ وَقُلْتُ إِنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: {وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ شَيْئًا
பாடம் : 126
ஜுனுபானவர் குளிருக்கு பயந்து தயம்மும் செய்யலாமா ?
334. அம்ர் இப்னுஸ் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் :
தாதஸாலாஸில் என்ற படையெடுப்பின் போது கடுங்குளிரான இரவில் (உறங்கும் போது) கனவு கண்டு நான் ஜுனுபாகி விட்டேன். நான் குளித்தால் மரணமடைந்து விடுவேனோ? என்று அஞ்சினேன். எனவே நான் தயம்மம் செய்து எனது தோழர்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினேன். இதை பிறகு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் (என்னை நோக்கி) அம்ரே! நீ ஜுனுபாக இருக்கும் போது உனது தோழர்களுக்கு தொழுகை நடத்தினாயா? என்று வினவினார்கள். நான் அவர்களிடம் என்னை குளிப்பதிலிருந்து தடுத்து விட்ட நிகழ்ச்சியை அவர்களிடம் தெரிவித்தேன். மேலும் நான், உங்களை நீங்கள் கொன்று விடவேண்டாம். அல்லாஹ் உங்களிடம் கருணை உள்ளவனாக இருக்கின்றான் என்று அல்லாஹ் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்றும் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும் அவர்கள் வேறு எதையும் கூறவில்லை என்று இப்னுல் முஸன்னா அறிவிக்கின்றார்கள்.