🔗

அபூதாவூத்: 345

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ، ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى وَلَمْ يَرْكَبْ، وَدَنَا مِنَ الْإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا»


345. ஒருவர் ஜும்ஆ நாளன்று (தலையைக்) கழுவி, குளித்து முதல் நேரத்திலேயே புறப்பட்டு சென்று ஆரம்ப சொற்பொழிவையும் பெற்று விடுகின்றார். வாகனத்தில் செல்லாமல் நடந்தே செல்கின்றார். இமாமுக்கு அருகில் சென்று சொற்பொழிவை வீணாக்காமல் செவிமடுக்கின்றார் என்றால் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு வருடம் நோன்பு நோற்ற, நின்று தொழுத வணக்கத்தின் கூலி கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் அஸ்ஸகபீ (ரலி)