جَلَسْنَا لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَخَرَجَ إِلَيْنَا فَجَلَسَ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ، فَقَدْ ضَادَّ اللَّهَ، وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُهُ، لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ عَنْهُ، وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ أَسْكَنَهُ اللَّهُ رَدْغَةَ الْخَبَالِ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ»
பாடம்:
விவரம் அறியாமல் ஏதேனும் ஒரு வழக்கில் உதவி செய்தல்.
3597. யஹ்யா பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்காக (அவர்களின் வருகையை எதிர்பார்த்து) அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்:
யாரின் பரிந்துரை, அல்லாஹ்வின் சட்டங்களில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து விடுகிறதோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்வை எதிர்த்து விட்டார்.
யார் ஒரு அநீதியான வழக்கில், அது அநீதி என்று தெரிந்தே (அதற்காக) வாதிடுகிறாரோ, அவர் அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திலேயே இருக்கிறார்.
யார் ஒரு இறைநம்பிக்கையாளர் மீது அவரிடம் இல்லாத ஒரு குறையைக் கூறி அவதூறு சுமத்துகிறாரோ, அவர் கூறிய வார்த்தையிலிருந்து (தண்டனை பெற்று தூய்மையாகி) வெளியேறும் வரை அவரை ‘ரத்ஃகதுல் கபால்’ (எனும் நரகவாசிகளின் உடலில் இருந்து வழியும் சீழ் மற்றும் அழுக்குகள் நிறைந்த) இடத்தில் அல்லாஹ் தங்க வைப்பான்.