🔗

அபூதாவூத்: 360

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَمِعْتُ امْرَأَةً تَسْأَلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ تَصْنَعُ إِحْدَانَا بِثَوْبِهَا إِذَا رَأَتِ الطُّهْرَ أَتُصَلِّي فِيهِ؟ قَالَ: «تَنْظُرُ فَإِنْ رَأَتْ فِيهِ دَمًا فَلْتَقْرُصْهُ بِشَيْءٍ مِنْ مَاءٍ، وَلْتَنْضَحْ مَا لَمْ تَرَ وَلْتُصَلِّ فِيهِ»


360. துப்புரவை அடைந்ததும் எங்களில் ஒருத்தி தனது ஆடையை என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கேட்க நான் செவிமடுத்தேன். அதற்கு அவர்கள் தனது ஆடையை அவர் பார்ப்பாராக! அதில் இரத்தத்தை கண்டால் கொஞ்சம் தண்ணீரை கொண்டு கசக்கி விடுவாராக! இரத்தத்தை காணாத பகுதியில் தண்ணீரை தெளித்து அதிலேயே அவர் தொழுது கொள்வாராக! என்று பதில் சொன்னார்கள் என்று அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்.