دَخَلَ زَيْدُ بْنُ ثَابِتٍ، عَلَى مُعَاوِيَةَ، فَسَأَلَهُ عَنْ حَدِيثٍ فَأَمَرَ إِنْسَانًا يَكْتُبُهُ، فَقَالَ لَهُ زَيْدٌ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا أَنْ لَا نَكْتُبَ شَيْئًا مِنْ حَدِيثِهِ» فَمَحَاهُ
3647. முத்தலிப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது முஆவியா (ரலி), ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை கேட்டார். மேலும் (தன்னருகில் உள்ள) ஒருவரிடம் அந்த ஹதீஸை எழுதச் சொல்ல அவர் எழுதினார். உடனே ஸைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் கூறும் செய்திகளை எழுதவேண்டாம் என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள் என்று கூறினார். எனவே (எழுதப்பட்ட) அந்த ஹதீஸை அவர் அழித்துவிட்டார்.